முதலமைச்சர் முக ஸ்டாலினை சோகத்தில் ஆழ்த்திய முக்கிய நபரின் மரணம்.!! - Seithipunal
Seithipunal


பத்திரிகைத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற, யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலகத் தலைமை நிர்வாகியும், மூத்த புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றிய டி.குமார் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டி.குமார் மறைவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் செய்திவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பத்திரிகைத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற, யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலகத் தலைமை நிர்வாகியும், மூத்த புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றிய திரு.டி. குமார் அவர்கள் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

திரு.டி.குமார் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு பத்திரிகைத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், மறைந்த புகைப்படக் கலைஞரின் குடும்ப சூழ்நிலையைக் கருதி சிறப்பு நேர்வாக ரூபாய் மூன்று லட்சம் பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin mourning for t kumar death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->