ஐ.டி சோதனை எல்லாம் அரசியல் நாடகம்! - அமைச்சர் மனோ தங்கராஜ்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மற்றும் திருவண்ணாமலையில் அமைச்சர் எ.லவ வேலுவுக்கு சொந்தமான இடங்களிலும், கரூர் மற்றும் கோவையில்திமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.

இந்த வருமான வரி சோதனை குறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "நிறைவேற்றப்பட்ட 28 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மக்கள் பணியை செய்ய விடாமல் ஒன்றிய அரசு தடுக்கிறது. அதன் ஒரு பகுதியாக வருமானவரித்துறை சோதனை மூலமும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை ஒன்றிய அரசு தடுக்க நினைக்கிறது. இது ஒரு அரசியல் நாடகம் என அனைவருக்கும் தெரியும். 

தாராளமாக வருமான வரித்துறை சோதனை நடத்தட்டும். பாஜகவினர் தங்களைப் பற்றியும் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசோதனை செய்ய வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் தங்களுக்கும் பொருந்துமா? ஏன் பொருந்தவில்லை? என்று பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்" என பதில் அளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister ManoThangaraj said itraid was political drama


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->