'அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள்'; அமைச்சர் கோவி.செழியன் ..!
Minister Kovi Sezhiyan said that Vice Chancellors will be appointed to all universities soon
உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் அடுத்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் கூறியதாவது:
தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில், மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட கோவி.செழியன், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள் மற்றும், இதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என்று அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்திருந்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதை எதிர்த்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் கே.வெங்கடாச்சலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, துணைவேந்தர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிதமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. குறித்த மனுவை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வுக்கு முன் நேற்று விசாரித்தது.
அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, துணைவேந்தர் நியமன சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்துள்ளது. மேலும் நிலுவையில் உள்ள மனுவை 06 வாரங்களுக்குள் விசாரிக்கவும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே தெரிவித்த கருத்துகளை கேட்கவும் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Minister Kovi Sezhiyan said that Vice Chancellors will be appointed to all universities soon