மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிப்பு.. வைகோ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர் ஏ.ஸ்.மோகன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிர்வாகிகள் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வேறு ஒருவருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர் ஏ.ஸ்.மோகன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழகத்தின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் இ.மார்கோனி எம்.ஈ, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mdmk members new posting for vaiko


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->