#மயிலாடுதுறை || மதிமுக பொறுப்பாளர்கள் கூண்டோடு ராஜினாமா.!!
Mayiladuthurai MDMK office bearers resign
மயிலாடுதுறை மாவட்டத்தின் மதிமுக மாவட்ட செயலாளராக இருந்து வந்த சீர்காழியைச் சேர்ந்த மார்க்கோனி அதிமுகவில் இணைய போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனால் அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்து மதிமுகவின் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று மாலை தனது ஆதரவாளருடன் செய்தியாளர்களை சந்தித்த மார்க்கோனி தன்னையும் சேர்த்து 28 மாவட்ட பொறுப்பாளர்கள் மதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தெரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பிறகு லண்டனுக்கு குடிபெயர உள்ளதாக துரை வைகோ தெரிவித்து இருந்தார். ஆனால் எந்த உழைப்பும் இல்லாமல் தற்பொழுது துரை வைகோ மதிமுகவின் முக்கிய பதவிக்கு வந்துள்ளார். நாங்கள் கட்சிக்காக 30 ஆண்டுகளாக உழைத்து வருகிறோம். மதிமுகவில் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எந்த ஒரு மதிப்பும் இல்லை. இதன் காரணமாக மதிமுக வின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விளக்குகிறேன். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆதரவாலுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
Mayiladuthurai MDMK office bearers resign