மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு அனுமதி! நிபந்தனைகள் விதித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!
madurai murugan maanadu BJP Hindu
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை பாண்டி கோயில் அருகே வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டுத் திடலில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிக் கோயில்கள் அமைக்கப்பட்டு, 10 நாட்கள் பூஜை நடத்த விழாக்குழு அனுமதி கோரியது. ஆனால், காவல்துறை அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து மதுரை பக்தர் முத்துக்குமார், மாநாட்டுக்கும் பூஜை நிகழ்வுக்கும் அனுமதி கோரி, மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், காவல்துறையின் கேள்விகளுக்கு விழாக்குழு முழுமையாக பதிலளிக்க வேண்டும் என நீதிபதி பி.புகழேந்தி உத்தரவிட்டார். தொடர்ந்த விசாரணையில், அரசு தரப்பினர், மாநாட்டுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனை பதிவுசெய்த நீதிபதி, மத நிகழ்ச்சியில் அரசியல் கலந்துவிடக்கூடாது என எச்சரித்து, அறுபடை வீடுகளின் மாதிரிகளை அமைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
English Summary
madurai murugan maanadu BJP Hindu