'உடல் முழுவதும் கண்ணும், உடல் முழுவதும் சிந்திக்கும் திறன் இருந்தால்தான் கட்சி நடத்த முடியும்'; அமைச்சர் துரைமுருகன்..!
Minister Duraimurugan says that a party can only be run if one has eyes all over the body
ஒரு கட்சியை நடத்த வேண்டும் என்பது சாதாரணமானது அல்ல. கட்சியை நடத்துகிற தலைவருக்கு, முகத்தில் இரண்டு கண் அல்ல. உடல் முழுவதும் கண்ணாக இருக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் வேலூரில் நிருபர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உடல் முழுவதும் சிந்திக்கும் திறன் இருக்க வேண்டும் எனவும், காரணம் பல்வேறு குணங்களைக் கொண்ட, பல்வேறு விதமான மனிதர்களை அடங்கியது ஒரு கட்சி என்று பேசியுள்ளார்.
அத்துடன், எல்லோரையும் ஒன்று சேர்த்து அதனை அழைத்து செல்லும் திறமை எந்த கட்சிக்கு இருக்கிறதோ அந்த கட்சி, வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார். அவை இருந்தால் மட்டுமே கட்சி செழிப்பாக இருக்கும் என்றும், அது இல்லை என்றால் அந்த கட்சி கொஞ்ச நாளில் இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Duraimurugan says that a party can only be run if one has eyes all over the body