சனாதன சர்ச்சை || உதயநிதிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் உதவி ஸ்டாலின் பேசியது குறித்து ஆங்கில நாளேடு நிறுவனத்தின் ஆலோசனை ஆசிரியர் அபிஜித் மஜூம்தார் கட்டுரை எழுதி இருந்தார். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கூறி அவர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் மீது விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு நேரில் ஆஜராக மாறு அபிஜித்திற்கு சம்மன் அனுப்பினர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அபிஜித் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இந்த விசாரணைக்கு வந்த போது மனுதாரரை கைது செய்யும் நோக்கம் தற்போது இல்லை எனவும் விசாரணைக்கு ஆஜராக மாறு மட்டுமே அனுப்பியதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வரும் நவம்பர் 8ம் தேதி அபிஜித் ஆஜராக மாறு உத்தரவிட்டதோடு மனு மீதான விசாரணையை நவம்பர் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தார.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MadrasHC orders Abhijith to appear in Udayanidhi defamation case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->