கோடநாடு எஸ்டேட் வழக்கு || நேரில் ஆஜராக ஈபிஎஸ்-க்கு விலக்கு.!!
MadrasHC order EPS exempted from appearing
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு படுத்தி வீடியோ வெளியிட்ட பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். கோடநாடு வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி வீடியோ வெளியிட்டு எனது பெயருக்கும் கட்சிக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு செயல்பட்ட மேத்யூ சாமுவேலிடம் நஷ்ட ஈடாக ரூ 1.1 கோடி பெற்றுத் தர வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜதாராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவருக்கான பாதுகாப்பு நடைமுறை, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமம் ஆகிய காரணங்களால் நேரில் ஆஜராக இயலாது என தெரிவிக்கப்பட்டது.
இதன் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராகுவதற்கு விளக்கு அளிக்கப்பட்டதோடு, அவரிடம் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலனை நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
MadrasHC order EPS exempted from appearing