ஆட்சியை தட்டி தூக்கியது பாஜக.! சற்றுமுன் வெளியான தேர்தல் முடிவுகள்., பெரும் சோகத்தில் மூழ்கிய காங்கிரஸ்.!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தின் சட்டமன்ற பொது தேர்தல் போலவே ஒரு மினி சட்டமன்ற தேர்தல் மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்துள்ளது. அம்மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. காங்கிரசில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் இருந்து விலகியதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பா.ஜனதா அரசு அம்மாநிலத்தில் அமைந்தது. 

ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மொத்தம் 24 எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் இருந்து விலகினர். மேலும் அம்மாநிலத்தில் ஏற்கனவே 3 தொகுதிகள் காலியாக இருந்தது. ஆக மொத்த 28 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களில் வெற்றி பெற்றால்தான், சிவராஜ் சிங் சவுகானின் பாஜக  ஆட்சி தொடரும். எனவே இந்த தேர்தல் ஒரு மினி சட்டமன்ற பொது தேர்தல் என்று சொல்லப்படுகிறது. இந்த தேர்தலின் முன்னணி மற்றும் வெற்றி நிலவரங்கள்.,

வெற்றி நிலவரம்:

பாஜக   :  12  இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் : 2  இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

முன்னணி நிலவரம்: 

பாஜக   :  7  இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் :  இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhya pradesh by election result


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->