#BREAKING || நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வழக்கு., சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
Local Body Election ADMK ChennaiHC
தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி மாதம் 19 மாதம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தேர்தல் நடக்கும் பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுக நிர்வாகி தாக்கல் செய்துள்ள முறையீட்டு மனுவில், ஊரக பகுதி ஊழியர்களையே தேர்தல் அலுவலர்களாக நியமிக்க வேண்டும் என்றும், தேர்தல் நடக்கும் பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த கூடாது என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஊரகபகுதி அரசு ஊழியர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க கோரிய வழக்கை, அதிமுக நிர்வாகி வாபஸ் பெற்றுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஊரகப் பகுதிகளில் யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது" என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதனை அடுத்து அரசு ஊழியர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க கோரிய வழக்கை அதிமுக நிர்வாகி வாபஸ் பெற்று கொண்டார்.
English Summary
Local Body Election ADMK ChennaiHC