விஜயை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார் முதலமைச்சர்... சிறுமைப்பட்டு போயிடுவீங்க... சாபம் விட்ட சபாநாயகர் அப்பாவு!
Karur Stampede Vijay MK Stalin appavu
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு, செய்தியாளர்களிடம் பேசும் போது கரூர் சம்பவம் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: “கரூர் விவகாரம் மூலம் முதலமைச்சரை சிறுமைப்படுத்த முயற்சிப்பவர்கள், இறுதியில் தாமே சிறுமை அடைவார்கள். பழிவாங்கும் எண்ணம் முதலமைச்சருக்கிருந்தால், விஜயை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை; அதுவே அவரது பெருந்தன்மையின் அடையாளம்.”
அப்பாவு மேலும் கூறினார்: “கரூரில் நிகழ்ந்த துயரச்சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தபோது, சிலர் துண்டை காணோம், துணியை காணோம் என ஓடியார்கள். ஆனால் எந்த தலைவரும் தன் தொண்டன் உயிரிழக்க வேண்டும் என விரும்ப மாட்டார் என்பதை முதலமைச்சர் தெளிவாக கூறினார். மக்களுக்காக அவர் வெளிப்படையாகப் பேசினார், அதுவே உண்மையான தலைமைத்துவத்தின் வெளிப்பாடு.”
முதலமைச்சரின் மனிதநேயமும் பொறுமையும் பொதுமக்களால் பாராட்டப்படுகின்றன எனவும், சிலர் அரசியல் பலனுக்காகவே இந்த விவகாரத்தை பெரிதாக்கி பேசுகின்றனர் எனவும் சபாநாயகர் விமர்சித்தார்.
“முதலமைச்சர் தன் கடமையில் உறுதியுடன் உள்ளார். மக்கள் நலமே அவரின் இலக்கு. உண்மையை மறைக்க முடியாது,” என்று தெரிவித்தார்.
English Summary
Karur Stampede Vijay MK Stalin appavu