இன்ஸ்டாகிராம் நட்பு நரகமாய் மாறியது!-15 வயது சிறுமியை 3 பேர் கடத்தி கொடூர வன்முறை..! நடந்தது என்ன...?
Instagram friendship turned into hell 3 people kidnapped 15 year old girl and brutally raped her What happened
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 15 வயது சிறுமி, இன்ஸ்டாகிராம் வழியாக சுபம் மிஸ்ரா என்ற இளைஞருடன் பழகி வந்தார். சில வாரங்களில் ஆன்லைன் நட்பு நெருக்கமானதாக மாறியது. இதையடுத்து சுபம், "சந்திப்போம்" எனக் கூறி சிறுமியை ஓட்டலுக்கு வர அழைத்தார்.
சிறுமி அதில் எந்த தீங்கும் நினைக்காமல் சென்றபோது, சுபம் அவரை காரில் அழைத்து ஓட்டலுக்கு சென்றார். ஆனால் அங்கு சுபத்தின் நண்பர்கள் விமல் மற்றும் பியூஷ் காத்திருந்தனர். மூவரும் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக தாக்கி, ஓட்டல் அறையில் 2 நாட்கள் அடைத்து வைத்து கொடூரமாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர்.

அதுமட்டுமல்லாமல், சிறுமியின் உடலில் பற்களால் கடித்து காயங்கள் ஏற்படுத்தியதாகவும், அவளது வீடியோவை பதிவு செய்து, “யாரிடமும் சொன்னால் இணையத்தில் வெளியிடுவோம்” என மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இரண்டு நாட்களுக்குப் பிறகு, தன்னை விடுமாறு சிறுமி கெஞ்சியபோது, குற்றவாளிகள் அவளை வீட்டின் அருகே விட்டு தப்பினர்.
வீடு திரும்பிய சிறுமி, தன் பெற்றோரிடம் நடந்த கொடுமையை அழுதபடி தெரிவித்தார். அதன்பேரில் குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.விசாரணையில் போலீசார் சுபம் மிஸ்ரா மற்றும் பியூஷை கைது செய்துள்ளனர். இன்னும் தலைமறைவாக உள்ள விமலை வலைவீசி தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
English Summary
Instagram friendship turned into hell 3 people kidnapped 15 year old girl and brutally raped her What happened