வேகத்தின் வேட்டை மரணத்தில் முடிந்தது! - ராயப்பேட்டை பீட்டர்ஸ் பாலத்தில் நள்ளிரவு பைக் ரேஸ் சோகம்..!
pursuit speed ended death Midnight bike race tragedy at Peters Bridge Royapettah
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் பாலம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் நடந்த அபாயகர பைக் ரேஸ் பேரழிவாக முடிந்தது. அதில் கலந்து கொண்ட சுஹைல் மற்றும் எதிரே ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டிவந்த குமரன், மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கடுமையான தாக்கத்தால் சுஹைலின் நண்பர் சோயல் தீவிர காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் ரேஸ்களை தடுக்க காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், நள்ளிரவு ரேஸ் கலாச்சாரம் இன்னும் நகரின் சில பகுதிகளில் தொடர்ந்துகொண்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
pursuit speed ended death Midnight bike race tragedy at Peters Bridge Royapettah