உள் ஒதுக்கீடு சர்ச்சை: கர்நாடகாவில் 56,000 அரசு வேலைவாய்ப்புகள் முடக்கம்!
Karnataka Halts Recruitment of 56k Posts Amid SC Internal Reservation Protests
கர்நாடகாவில் பட்டியலின (SC) சமூகங்களுக்குள்ளான உள் ஒதுக்கீடு விவகாரம் பெரும் அரசியல் மற்றும் சமூகப் போராட்டமாக வெடித்துள்ளதால், சுமார் 56,000 அரசுப் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை மாநில அரசு அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.
கர்நாடக அரசு 101 பட்டியலினச் சாதிகளைப் பின்வருமாறு மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளது:
SC-A: மாதிகா, அருந்ததியர் உள்ளிட்ட சாதிகள்.
SC-B: ஹொலையா, ஆதி திராவிடர் உள்ளிட்ட சாதிகள்.
SC-C: இதர பட்டியலினச் சாதிகள்.
இந்த மாற்றத்தால் SC-B மற்றும் SC-C பிரிவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சாதிகள், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பறிபோவதாகக் கூறி மைசூரு, குல்பர்கா, பீதர் உள்ளிட்ட இடங்களில் தீவிரப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அரசின் நெருக்கடியும் தற்காலிகத் தடையும்:
காலிப் பணியிடங்களை நிரப்பும் அரசாணை வெளியானதைத் தொடர்ந்து போராட்டங்கள் வலுவடைந்ததால், முதல்வர் சித்தராமையா அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். எனினும், அமைச்சர்களிடையே நிலவிய கருத்து முரண்பாட்டால் ஒருமித்த முடிவு எடுக்க முடியவில்லை.
சட்டத்துறை அமைச்சரின் விளக்கம்:
சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, 56,432 பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு முடிவெடுத்துள்ளது" எனத் தெரிவித்தார்.
English Summary
Karnataka Halts Recruitment of 56k Posts Amid SC Internal Reservation Protests