அங்கிட்டு கோடி கோடியாய் பணம் இருக்கு - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னையில், மறைந்த அதிமுக நிர்வாகி தனசேகர் நினைவு கோப்பை கால்பந்து போட்டியினை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது, 

"தினகரன், சசிகலா, ஓபிஎஸ் இடம் பணம் கோடிக் கோடியாக உள்ளது.  ஓபிஎஸ் பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். பணம் பாதாளம் வரை பாயும். அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் தாவுவதால் அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை.

எம்ஜிஆர் தொண்டர்களை நம்பித்தான் அதிமுகவை ஆரம்பித்தார். அதிமுக என்ற கட்சி தலைவர்களை நம்பியோ, சட்டமன்ற உறுப்பினர்களை நம்பியோ, எம்பிக்களை நம்பியோ ஆரம்பிக்கப்படவில்லை. 

பன்னீர்செல்வம் அரசியலை விட்டுவிட்டு நடிக்க சென்றிருந்தால் ரஜினி, சிவாஜியையே தோற்கடித்து ஆஸ்கர் விருது பெற்றிருப்பார். பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் அனைத்தும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்பது தான்.

அதிமுகவில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு என்றுமே இடம் கிடையாது. சுருக்கமான சொல்ல வேண்டும் என்றால் கறந்த பால் மடிபுகாது, கருவாடு மீனாகாது". என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyakumar say about ttv sasikala money


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->