ராசாக்கண்ணுவை கொன்றவன் தலித், கிறிஸ்த்துவ முதலியார்.! படத்தை இயக்கியவன் தெலுங்கு செட்டி.! முட்டி கொள்ளும் தமிழ்ச்சாதி.! - Seithipunal
Seithipunal


ஜெய்பீம் : ராசகண்ணுவை கொன்றவன் தலித் ஏட்டு வீராசாமி, கிறிஸ்தவ முதலியார் எஸ்ஐ அந்தோணிசாமி, படத்தை இயக்கியவன் தெலுங்கு செட்டியார், படத்தில் நடித்தவன் கொங்கு வேளாளக் கவுண்டர் சூர்யா. கொலை செய்யப்பட்ட ராசாக்கண்ணு குறவர் சமூகம். இப்படித்தான் சமூகவலைத்தளங்களில் ஒருமையில், சாதிகளை வைத்து இந்த திரைப்படம் விமர்சனத்துக்கு உள்ளாகி கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் வன்னியர் சமூகத்தை சமூகத்தை உயர்த்திக் காட்ட வேண்டிய அந்த இடத்தில், வன்னிய சமூகத்தை ஒரு கொடூரனாக (அந்தோணிசாமி முதலியார்) சித்தரித்து இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதற்கு வன்னியர் சங்கம், தேவேந்திரகுல வேளாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் யார் யார் எந்த சாதி என்பது குறித்த விவரங்களை பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இவர்கள் யார்., இவர்களின் நோக்கம் என்ன? என்பது குறித்து சமூக வலைதளங்களில் பேசபடுவது என்ன? பின்வருமாறு.,

வன்னியருக்கு எதிரான பிரச்சனையை இப்ப லாகவமா பட்டியலினத்தவர் பக்கம் தள்ளிவிட்டுருக்காரு கொங்குவெள்ளாளர் சூர்யா. 

எஸ்ஐ அந்தோணிசாமி முதலியார்ங்கற ஆதிக்க சாதி. துளுவ வெள்ளாள முதலியாரும் பட்டியலினத்தை சேர்ந்த ஏட்டு வீராசாமியும் தான் ராஜாக்கண்ணுவை அடிச்சுக் கொன்ற கொலை பாதகர்கள். உயர்நீதி மன்றத்தால் ஆயுள்தண்டனை பெற்றவங்க அவங்கதான். 

ஒருத்தர் ஆதிக்கசாதி (துளுவ வெள்ளாள முதலியார்)
இன்னொருத்தர் ஒடுக்கப்பட்ட சாதி (தலித்) 

இந்த அரசு அமைப்புல.,  அதிகாரம்ங்கற ஆயுதம்., ஒடுக்கப்பட்டவன் கைல கெடைச்சாலும் (தலித் ஏட்டு), அவன் தன்னோட நிலையை மறந்து., தனக்கு கீழ இருக்கறவன ஒடுக்கத்தான் நினைக்குறான்னு அழுத்தமா சொல்லியிருக்க வேண்டிய படம் இது. 

எளிய மக்கள் மீதான இந்த அடக்கு  முறைக்கு எதிராக.,  உண்மைலயே  அரசு அதிகாரத்தை., போலீஸ் அராஜகத்தை எதிர்த்து போராடி வென்ற கொடுத்த வன்னியர்கள் சொல்ல வேண்டிய கோஷம்தான் ஜெய்பீம்.

உடனே கம்னீஸ்ட்ங்க இதுக்கு சாதிசாயம் பூச வேணாம்னு வந்துறாதீங்க.. மொதல்ல அவங்க படையாட்சிங்க., அவங்களோட போர்குணமும் நியாய உணர்வும் கொஞ்சமாவது இன்னும் அவங்க உடம்புல ஒட்டினுருக்க போய்தான் அவங்க கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு வந்து வாழ்க்கைய தொலைச்சாங்க.

இப்பேர்பட்ட சமுதாயத்தை குறியீடு வெச்சு கொச்சைப்படுத்தி அதுல குளிர்காயுறவன் அறவுணர்வும், மனிதநேயமுமற்ற கீழ்தரமான புத்தியுள்ளவன். இந்த மட்டமான ஆளு சூர்யாவுக்கு தான் சைட் ஸ்டேண்ட் போட்டு நிக்கறானுங்க அறிவில்லாத மடயனுங்க.," என்ற இந்த பதிவு தீயை பரவி கொண்டு இருக்கிறது.

 

நல்ல இருக்கும் தமிழகத்தில் சாதிக்கலவரத்தை தூண்டும் விதமாக படம் எடுத்து உள்ள ஜெய்பீம் படக்குழு மன்னிப்பு கேட்டால் ஒழிய இதுக்கு முடிவே இருக்காது என்பதே உண்மை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JAIBHIN CAST ISSUE


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->