திமுக பிரமுகர் மகள் தூக்குபோட்டு தற்கொலை - வெளியான முதல்கட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி : திமுக பிரமுகர் ஒருவரின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தெக்கன்திருவிளை பகுதியை சேர்ந்தவர் பழனிகுமரன். இவர் அந்த பகுதியில் திமுக கிளை செயலாளராக இருந்து வருகிறார்.

இவரின் மகள் ஆஷிகா (16 வயது) அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், பழனி குமரனின் உறவினர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல ஆஷிகாவை அழைத்ததாக தெரிகிறது. இதற்கு பெற்றோர்கள் 'இந்த முறை முடியாது, அடுத்த முறை செல்லலாம்' என்று ஆஷிகாவிடம் தெரிவித்து உள்ளனர்.

இதனால் மனவருத்தம் அடைந்த ஆஷிகா, கடந்த இரண்டு நாட்களாக உணவருந்தாமல் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று காலை ஆஷிகா தனது ரூமில் சேலையில் தூக்குப்போட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டே இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் தாயார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த சம்பவம் குறித்து இரணியல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iraniyal School Girl Suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->