பட்டினப்பாக்கம்: சாலையில் திடீரென தீ பற்றி எரிந்த பைக்கால் பரபரப்பு: ஓட்டுனரின் செயலால் பெரும் விபத்து தவிர்ப்பு..! - Seithipunal
Seithipunal


சென்னை பட்டினப்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பைக்கில் இருந்து திடீரென புகை கிளம்பியதை தொடர்ந்து, பைக்கை ஓட்டி வந்த நபர் சுதாரித்துக்கொண்டு, உடனடியாக பைக்கை விட்டு இறங்கியுள்ளார்.

பின்னர் சாலையோரமாக பைக்கை நிறுத்திவிட்டு தூரமாக சென்றுள்ளார். அவர் அங்கிருந்து சென்ற அடுத்த சில நிமிடங்களிலேயே பைக் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. 

சாலையில் சென்றுக் கொண்டிருந்த பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், அந்த வழியாக சென்றவர்கள் அச்சமடைந்தனர். பலர் அந்த பைக்கை அணைக்க முயற்சி செய்தும் பலனில்லை. 

இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த பைக்கின் தீயை அணைத்து, வாகனத்தை சாலையிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்வபத்தால் பட்டினப்பாக்கம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, பைக்கில் இருந்து புகை வந்ததைக் கண்டதும், உடனடியாக பைக்கை விட்டு இறங்கிய நபரின் செயல், பெரும் விபத்தைத் தவிர்க்க உதவியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bike suddenly catches fire on the road in Pattaniambakkam


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->