ஜி.பி.எஸ்., சிக்னலில் இடையூறு; மீண்டும் டில்லிக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்..! - Seithipunal
Seithipunal


இன்று டில்லியிலிருந்து ஜம்மு செல்ல திட்டமிடப்பட்டிருந்த ஐ.எக்ஸ் 2564, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சிறிது ஜி.பி.எஸ்., சிக்னல் இடையூறு காரணமாக நேரத்திலேயே மீண்டும் டில்லிக்கு திரும்பியது.

இன்று டில்லி-ஜம்மு செல்லும் ஐ.எக்ஸ் 2564, விமானம் புறப்பட்டு செல்லும் போது ஜி.பி.எஸ்., குறுக்கீடு ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, விமானத்தின் பைலட்டுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேற்கொண்டு பயணிக்காமல் மீண்டும் டில்லிக்கு திரும்பி விட்டனர் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

விமானம் திருப்பி அனுப்பப்பட்டதை தொடந்து சில மணி நேரத்திற்கு பிறகு பயணிகள், ஜம்மு செல்வதற்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும்,  கால தாமத பயணத்தால், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்றும்,  எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பே முதல் முன்னுரிமை என்று செய்தி தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்பு ரீதியாக அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளில் பயணிக்கும்போது இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், ஜி.பி.எஸ்., குறுக்கீடு தொடர்பாக, உரிய துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jammu bound Air India flight returns to Delhi due to GPS signal disruption


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->