இழுபறிக்கு பின் CPMக்கு 2 சீட் உறுதி.!! இன்றே கையெழுத்தாகும் ஒப்பந்தம்.!! - Seithipunal
Seithipunal


திமுக உடனான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் மூன்றாம் கட்டம் தற்போது நிறைவு பெற்று இருக்கும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை தொகுதியை திமுக உறுதி செய்துள்ளதாகவும், மற்றொரு தொகுதி எது என்பது தேர்தல் ஒப்பந்தத்தின் மூலமே தெரியவரும் எனவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுக தரப்பை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது இரண்டு தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்க திமுக தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info DMK deside to allocate 2 seats to CPM


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->