#BREAKING || அதிமுகவின் வரலாற்றில் மிக முக்கிய வழக்கு... உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அதிமுக பொதுக்குழுவில் இடம் பெற்றுள்ள 10க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனர். 

பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்துவது முறையல்ல எனவும், பொது குழுவில் கட்சி உறுப்பினர்களின்விருப்பப்படி ஜனநாயகம் முறைப்படி எடுக்கும் முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்தக்கூடாது என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அனுமதியுடன் இன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், அதிமுகவின் வரலாற்றில் முக்கிய வழக்காக அமைய உள்ள அதிமுக பொதுகுழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த இந்த வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian sc admk ops vs eps case july


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->