#BREAKING || அதிமுகவின் வரலாற்றில் மிக முக்கிய வழக்கு... உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.!
Indian sc admk ops vs eps case july
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அதிமுக பொதுக்குழுவில் இடம் பெற்றுள்ள 10க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்துவது முறையல்ல எனவும், பொது குழுவில் கட்சி உறுப்பினர்களின்விருப்பப்படி ஜனநாயகம் முறைப்படி எடுக்கும் முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்தக்கூடாது என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அனுமதியுடன் இன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், அதிமுகவின் வரலாற்றில் முக்கிய வழக்காக அமைய உள்ள அதிமுக பொதுகுழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த இந்த வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.
English Summary
Indian sc admk ops vs eps case july