மோடி ஆட்சியில் இந்தியா வல்லரசு நாடாகும்.. அண்ணாமலை பேச்சு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நாளை மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. அதனால் அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.பி முருகானந்தத்தை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மக்களிடையே வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். 

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, நம் பாரதப் பிரதமர் ஆட்சியில் இந்தியா வல்லரசு நாடாக மாறும். பாரத பிரதமர் மோடி அவர்கள் உலகத் தலைவராக உருவெடுப்பார். பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர அறிவிப்பு வெளியிட்ட பிறகும் எதிர்கட்சிகள் தோல்வி பயத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India united country bjp modi government


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->