இந்திய-சீன எல்லை விவகாரம்: ராகுல் காந்திக்கு ஜாமின்! - Seithipunal
Seithipunal


2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி, இந்தியா-சீனா எல்லை சந்திக்கையில் மத்திய அரசு நேர்மையாக செயல்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார். அவரது இந்த கருத்து, இந்திய ஆயுதப்படையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய ஓய்வுபெற்ற உதய்சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் லக்னோ நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனை ரத்து செய்யக் கோரி அவர் அலகாபாத் ஐகோர்ட்டை அணைந்தும், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந்தநிலையில், லக்னோ நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 15) ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட், அவருக்கு ஜாமின் வழங்கும் உத்தரவை பிறப்பித்தார்.

இந்த வழக்கு, இந்திய அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெற்றது. ராகுல் காந்தியின் அறிக்கைகள் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

india china border controversy speech ragulgandhi bail


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->