தற்கொலையின் தலைநகரம் தமிழ்நாடு... 13 குற்றசாட்டுகளை வெளியிட்ட தமிழக ஆளுநர்!
Governor RN Ravis 13 Point Charge Sheet Explosive Allegations Against TN Govt
தமிழக அரசுக்கு எதிராக 13 'அணுகுண்டுகள்': உரையைப் புறக்கணித்த ஆளுநரின் அதிரடி அறிக்கை!
தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டு முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என். ரவி 4-வது ஆண்டாகத் தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்ததுடன், தமிழக அரசின் மீது 13 கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆளுநரின் முக்கியக் குற்றச்சாட்டுகள்:
நிர்வாகத் தடை உரையாற்றும்போது எனது மைக் (Mic) தொடர்ந்து அணைக்கப்பட்டது.
பொருளாதாரம் ₹12 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகக் கூறுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.
சட்டம் - ஒழுங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 55%, பாலியல் வன்கொடுமைகள் 33% அதிகரித்துள்ளன.
சமூகச் சீரழிவு போதைப்பொருள் புழக்கத்தால் ஆண்டுக்கு 2000 இளைஞர்கள் தற்கொலை செய்கின்றனர்.
ஜனநாயகம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் கிராம ஊராட்சிகள் செயலிழந்துள்ளன; இது அரசியலமைப்புக்கு எதிரானது.
அரசு உரை அரசு கொடுத்த உரையில் ஏராளமான ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் தவறான அறிக்கைகள் இருந்தன.
நெறிமுறை தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதன் மூலம் அரசியலமைப்பு கடமை அவமதிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த வெளிநடப்பு?
"அரசு வகுத்தளித்த உரையில் மக்களைத் தவறாக வழிநடத்தும் தகவல்கள் இருந்ததாலும், எனது மைக் பலமுறை அணைக்கப்பட்டதாலும் நான் வெளியேறினேன்," என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தேசிய கீதம் தொடக்கத்திலேயே இசைக்கப்படாதது குறித்துத் தனது நீண்டகால வருத்தத்தையும் மீண்டும் பதிவு செய்துள்ளார்.
ஆளுநரின் இந்தத் தரவுப்பூர்வமான குற்றச்சாட்டுகள், தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளும் திமுக அரசுக்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Governor RN Ravis 13 Point Charge Sheet Explosive Allegations Against TN Govt