நற்செய்தி! முதல் முதலாக தமிழகத்தில் மின்சார பேருந்து சேவை...! - தொடங்கி வைத்த முதலமைச்சர் - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நெடுங்காலமாக டீசலில் இயங்கும் பேருந்துகள் உபயோகத்தில் வந்தது.ஆனால், முதல் முறையாக மின்சார பேருந்துகள்  விடப்பட்டுள்ளது.மேலும், சென்னையின் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில் டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக 1225 தாழ்தள மின்சார பஸ்களை உலக வங்கி உதவியுடன் வாங்க முடிவு செய்யப்பட்டது.

இது ரூ.697 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டமாக 625 மின்சார பேருந்துகளுக்கான ஒப்பந்தம் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டது.இதில் 400 ஏ.சி. அல்லாத பஸ்களும், 225 ஏ.சி. பஸ்களும் அடங்கும். இந்த மின்சார பஸ்களை இயக்குவதற்காக பெரும்பாக்கம், வியாசர்பாடி, பூந்தமல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டையிலுள்ள பணிமனைகளை புதுப்பித்து அங்கு பேருந்துகளுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான சாதனங்களும் அமைக்கப்பட்டு வந்தது.

இப்போது வியாசர்பாடி பணிமனையில் ரூ.200.40 கோடி மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான பராமரிப்பு கூடம், புதிய மின் மாற்றிகள் பொருத்துதல், அலுவலக நிர்வாக கட்டிடம், பணியாளர் அறை ஆகியவை புதுப்பித்து அமைக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவுதல் போன்ற பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து  இன்று, வியாசர்பாடி பணிமனையிலிருந்து 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.கி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாசர்பாடிக்கு நேரில் சென்று 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.அந்த பேருந்தில் ஏறி அதிலுள்ள வசதிகளையும் பார்வையிட்டார்.

அதற்கு முன்னதாக அங்கு ரூ.47.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த பணிமனையையும் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு. கலாநிதி எம்.பி., மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், அசோக் லேலண்ட் நிறுவன அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த 120 புதிய மின்சார பேருந்துகள் 11 வழித்தடங்களில் முதலில் இயக்கப்படவுள்ளது.

இந்த பேருந்துகளில் பாதுகாப்பு கருதி 7 சி.சி.டி.வி. கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி ஏறி இறங்கும் வகையில் பிரத்யேகமாக இருக்கைகள் உள்ளது. எதிர் எதிரே அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள், லக்கேஜ் வைப்பதற்கான இடம், அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகள் வெளியிடுவதற்கான ஒலி பெருக்கிகள், அவசர காலங்களில் அலாரம் ஒலிக்கக்கூடிய பொத்தான்கள், ஒவ்வொரு இருக்கையின்கீழ் சீட் பெல்டுகள், செல்போன்களுக்கான சார்ஜர் பாயிண்டுகள், எல்.இ.டி. விளக்குகள்.

ஓட்டுனருக்கு மின்விசிறி வசதி, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி என ஏராளமான வசதிகள் இந்த மின்சார பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பஸ்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீட்டர் வரை இயக்கலாம்.சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு டிக்கெட் வழங்குவார்கள். இந்த பேருந்துகளை இயக்கும் தனியார் ஒப்பந்ததாரருக்கு கி.மீ. ஒன்றுக்கு ஏ.சி.வசதி இல்லாத பேருந்துகளுக்கு 77 ரூபாயும், ஏ.சி. பேருந்துகளுக்கு 80.86 ரூபாயும் வழங்க மாநகர போக்குவரத்து கழகம் நிர்ணயம் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

First ever electric bus service in Tamil Nadu Chief Minister inaugurated


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->