'3 பிஎச்கே' டப்பிங்கிலேயே அழுதுவிட்டேன். படம் அந்த அளவுக்கு எமோஷன்லாக இருக்கிறது: சரத்குமார்..!
Sarathkumar says he cried during the dubbing of 3 BHK
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த்,. தனது 40-வது படமான '3 பிஎச்கே' திரைக்கு வரவுள்ளது. 'மிஸ் யூ' படத்தை தொடர்ந்து இந்த படத்தில் நடித்துள்ளார். '8 தோட்டாக்கள், குருதி ஆட்டம்' போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் படைத்ததை தயாரித்துள்ளது. இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற ஜூலை மாதம் 04-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் வாடகை வீடு இல்லாமல் தனக்கென ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது மிக பெரிய கனவாகும். அதன்படி, தங்களுக்கென சொந்தமாக ஒரு 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியாகி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சரத் குமார், "தமிழ், தெலுங்கு மொழிகளில் 3 பிஎச்கே படத்திற்கான டப்பிங்கிலேயே அழுதுவிட்டேன். படம் அந்த எமோஷன்களை நன்றாகக் கடத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
Sarathkumar says he cried during the dubbing of 3 BHK