காங். வேட்பாளரை விரட்டி அடித்த விவசாயிகள்.!! மயிலாடுதுறையில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதி உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டார். 

இவர் மயிலாடுதுறை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் திருமண்டங்குடி சக்கர ஆலை விவகாரம் தொடர்பாக விவசாயிகள் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். 

திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது திருமண்டங்குடி சக்கர ஆலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி படி கரும்பு கொள்முதல் தொகை துளியும் வழங்கவில்லை என குற்றம் சாட்டி திமுக கூட்டணி வேட்பாளரான சுதாவை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

விவசாயிகளை சமாதானம் செய்யும் முயற்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்ட போதும் அவர்கள் சமாதானம் அடையாததால் காங்கிரஸ் வேட்பாளர் சுதா தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் திரும்பிச் சென்றார். விவசாயிகளின் இந்த வாக்குவாதத்தால் மயிலாடுதுறையில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmers send back Congress candidate Sudha


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->