திமுகவின் களவாணித்தனம்! இந்து மதத்திலிருந்து வெளியேறத் தயாரா! ரவுண்டு கட்டிய டாக்டர்.கிருஷ்ணசாமி! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு வாக்கு சேகரிப்பதற்காக சாதனம் என்ற வார்த்தையை திமுக பயன்படுத்துவது களவாணித்தனம்!

திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "இந்து மதத்தை தாக்கிப் பேச வேண்டும், இந்து மக்களை காயப்படுத்த வேண்டும், இதன் மூலமாக மற்றவர்களிடமிருந்து வாக்கு பெற வேண்டும். இதுதான் திமுகவினரின் நோக்கம்.

இது திமுகவின் களவாணித்தனம் என்று தான் சொல்ல வேண்டும். சனாதனம் தான் இந்து மதம், அதுதான் வர்ணாசிரமம், அது மக்களை வேறுபடுத்தி காட்டுகிறது, இரண்டும் ஒன்றுதான் என்று என நீங்கள் முடிவு செய்தால் இனிமேல் நான் இந்துவாக இருக்க மாட்டேன் என ஸ்டாலினோ, உதயநிதியோ அல்லது திமுகவினரோ தமிழக மக்களிடத்தில் சபதம் ஏற்று இந்து மதத்தில் இருந்து வெளியே தயாராக இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrKrishnasamy asked whether the DMK ready to leave Hinduism


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->