"நாங்கள் இல்லையென்றால் இண்டி கூட்டணியே கிடையாது": காங்கிரஸை விளாசிய திமுக மாவட்டச் செயலாளர்!
DMK vs Congress Go Thalapathi’s Fiery Madurai Speech
மதுரை சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில், திமுக மாநகரச் செயலாளர் கோ.தளபதி ஆற்றிய உரை கூட்டணிக்குள் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.
கூட்டணி விரிசலும் 'பங்கு' அரசியலும்
தவெக தலைவர் விஜய் அறிவித்த "ஆட்சியில் பங்கு" திட்டத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி-க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் அதே கோரிக்கையை முன்வைப்பதை தளபதி கடுமையாகச் சாடினார்.
கடும் விமர்சனம்: "வார்டுகளில் பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இன்று ஆட்சியில் பங்கு கேட்பது வேதனையளிக்கிறது" என அவர் ஆவேசப்பட்டார்.
தேர்தல் வாய்ப்பு: கூட்டணி தர்மத்திற்காகப் பொறுமை காப்பதாகவும், தேவையற்ற நெருக்கடி கொடுப்பவர்களுக்கு அடுத்த தேர்தலில் 'சீட்' வழங்கக்கூடாது என்றும் தலைமையிடம் வலியுறுத்தினார்.
இண்டி கூட்டணியின் அச்சாணி
தலைமைத்துவம்: "டெல்லியில் 'இண்டியா' கூட்டணி பேசப்படுகிறது என்றால் அதற்கு முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகிய மூவரும்தான் காரணம். திமுக இல்லையென்றால் இக்கூட்டணியே கிடையாது" எனத் தெறிக்கவிட்டார்.
பாஜக மற்றும் ஆளுநர் மீதான தாக்குதல்
ஆளுநர்: தமிழக வரலாறும் மொழியும் தெரியாத ஆளுநரைச் சட்டமன்றத்தில் நாங்கள் திட்டினாலும் அவருக்குப் புரியாது எனச் சாடினார்.
அதிமுக & பாஜக: "அதிமுக வெற்றி பெற்றாலும் ஆட்சியை பாஜகதான் பிடிக்கும்; அதனால்தான் மோடி எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. இரட்டை இன்ஜின் என்று மழுப்புகிறார்கள்."
அரசியல் சூழ்ச்சி: திருப்பாறங்குன்றத்தில் 200 ஆண்டு பழமையான எல்லைக் கல்லை வைத்து பாஜக மத அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் நிகழ்ந்த இந்த அதிரடிப் பேச்சு, திமுக-காங்கிரஸ் உறவில் புகைச்சலை அதிகப்படுத்தியுள்ளது.
English Summary
DMK vs Congress Go Thalapathi’s Fiery Madurai Speech