நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள் இல்லை - திமுக அமைச்சர் சேகர்பாபு! - Seithipunal
Seithipunal


நாகை அருகே திருப்புகலூரில் உள்ள கருந்தாழ்குழலி அம்பாள் – அக்னீஸ்வரசாமி கோவில், வேளக்குறிச்சி ஆதீனத்திற்கு உட்பட்டது.

வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவிலில் பூஜை செய்துவிட்டு வீடு மற்றும் கட்டிட வேலைகள் தொடங்கினால் விரைவில் முடிவடையும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் திரளாக வருகை தருகிறார்கள்.

இந்த பழமையான கோவிலில் இன்று காலை சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா தொடக்கமாக சிவ வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைபெற்றது. பின்னர், வேத மந்திரங்கள் ஒலிக்க, சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, இதுவரை 3,000 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 250 கோவில்களில் விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

“ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் என்று கூறுபவர்கள் உண்மையை உணர வேண்டும். நாங்கள் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறோம்,” என்றார் அமைச்சர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK minister sekar babu Hindus 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->