அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு! சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!
DMK Minister Ponmudi Controversy speech
கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி செய்த சைவ-வைணவ சமயத்தை ஆபாசமாக சித்தரித்து பேசிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியன.
இதனை தொடர்ந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி நீக்கப்பட்டாலும், அமைச்சர் பதவியும் கட்சி உறுப்பினராகும் தொடர்ந்து வருகிறார்.
மேலும், பொன்முடி மன்னிப்பு கோரியும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இதற்கிடையே வழக்கறிஞர் ஜெகநாத், பொன்முடி மீது பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஒரு அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டாமா? இந்தப் பேச்சு மிகவும் துரதிருஷ்டவசமானது” என கண்டனம் தெரிவித்தார்.
பொன்முடியின் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரியுமா? என்ற கேள்விக்கு தமிழக டிஜிபி உடனடி பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், இன்று மாலை 4.45 மணிக்குள் டிஜிபி அலுவலர் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
DMK Minister Ponmudi Controversy speech