நயினார் அன்று எங்களிடம் என்ன சொன்னார் தெரியுமா? பரபரப்பை கிளப்பிய திமுக அமைச்சர்!
dmk minister KNN say about ADMK BJP Alliance Nayinar
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தாவது, “தி.மு.க.வைக் அகற்றுவேன் என சொல்லி தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் ஆனார். ஆனால், அதற்கு முன் அவர் எங்களை எப்படி சந்தித்தார் என்பதைப் பற்றி இப்போன்று வெளிப்படையாக கூற முடியாது,” எனக் குறிப்பிட்டார்.
அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் உள்ள குழப்பங்களை முதலில் தீர்த்துக்கொள்ள வேண்டும்; அதன் பிறகே தங்களைக் குறித்து விமர்சிக்கலாம் என்றும் அவர் எச்சரிக்கை தெரிவித்தார்.
பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் கடை ஒதுக்கீடு குறித்து, தனிநபரொருவரால் தொடரப்பட்ட வழக்கினால் பிரச்சனை எழுந்துள்ளதாகவும், அதற்கான மேல்முறையீடுகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
வரும் ஜூலை 8ம் தேதிக்கு நெல்லையப்பர் கோவிலில் நடைபெறவுள்ள தேரோட்டத்திற்கான அனைத்து முன் நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டதாகவும், சாலைகள் மற்றும் கூடுதல் வசதிகள் குறித்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
English Summary
dmk minister KNN say about ADMK BJP Alliance Nayinar