திருப்பூர் மாநகராட்சிக்கு புதியதாக ஐ.ஏ.எஸ் அந்தஸ்துள்ள அதிகாரி  நியமன‌ம்.! - Seithipunal
Seithipunal


சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையராக இருந்த எம்.பி.அமித் . ஐ ஏ எஸ் அவர்கள் தற்போது திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள்,  ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை அகற்றுவதிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதிலும், மாநகராட்சி நிர்வாகம் திணறிக்கொண்டிருக்கிறது, இதற்கு தீர்வுகாண காலியாக உள்ள ஆணையாளர் பதவிக்கு உடனடியாக நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்துள்ள ஆணையாளரை நியமிக்க போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையர் , மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர்களுக்கு கடந்த 16-06-2025 ம் தேதி திங்கள்கிழமை அன்று மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில்  தமிழ்நாடு அரசு திருப்பூர் மாநகராட்சிக்கு புதியதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்துள்ள எம்.பி.அமித் .ஐ ஏ எஸ் அவர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கதக்கது.

சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையராக இருந்த எம்.பி.அமித் . ஐ ஏ எஸ் அவர்கள் தற்போது திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.கோரிக்கையேற்று திருப்பூர் மாநகராட்சிக்கு புதியதாக ஐ.ஏ.எஸ். அந்தஸ்துள்ள அதிகாரி திருப்பூர் மாநகராட்சிக்கு ஆணையாளராக நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்தனர் ...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A new IAS officer has been appointed to the Tiruppur Municipal Corporation


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->