#BigBreaking | அமைச்சரர் குறித்து 'அந்தமாறி' கருத்து., சொந்த கட்சி பிரமுகரையே அதிரடியாக கைது செய்த திமுக அரசு.!
DMK member arrest for minister
திமுக அமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்ட, திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் திமுக மற்றும் திமுக அமைச்சர்கள், திமுகவின் தலைவர்கள், குறிப்பாக ஈ வே ராமசாமி மற்றும் கருணாநிதி போன்றவர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள் உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் திமுக அரசு இறங்கியுள்ளது.
இந்த நிலையில், திருச்சியில் அமைச்சரை அவதூறாக பேசியதால் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியை சேர்ந்த திமுக ஒன்றிய முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயகுமார் என்பவர், சமூக வலைதளம் மூலமாக, திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து அவதூறாக கருத்து பதிவு விட்டார் என்ற காரணத்திற்காக, இன்று போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
English Summary
DMK member arrest for minister