மீட்கப்பட்ட சோழர் கால பெருமை...! தாயகம் திரும்பும் ஆனைமங்கலம் செப்பேடுகள்...! - மோடிக்கு எச்.ராஜா பாராட்டு...!
glory Chola era has been restored Anaimangalam copper plates returning home H Raja praises Modi
தமிழக பாஜக மூத்த தலைவரான எச். ராஜா தனது எக்ஸ் தள பதிவில், தமிழர் வரலாற்றின் பெருமையை மீட்டெடுத்த முக்கிய நிகழ்வாக “ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்” தாயகத்திற்குத் திரும்பியிருப்பதை வரவேற்று உருக்கமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
முதலாம் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் செல்வமாக கருதப்படும் “ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்” நெதர்லாந்து அரசிடமிருந்து மீட்கப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டிருப்பது தமிழ் நாகரிகத்தின் வெற்றிக் குரலாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அரிய பாரம்பரிய சின்னங்களை மீட்டுத் தந்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், “ஆனைமங்கலம் செப்பேடுகள் என்பது சாதாரண தொல்பொருள் அல்ல; ஆசிய கண்டம் முழுவதும் வணிகம், ஆட்சி மற்றும் பண்பாட்டு செல்வாக்கை நிலைநிறுத்திய தமிழ் நாகரிகத்தின் உயிர்ப்புமிக்க சான்றுகள் அவை” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு சிறப்பிடம் வழங்கியதிலிருந்து, தமிழர் வரலாற்று சின்னங்களை தாயகத்திற்கு மீட்டுவரும் முயற்சிகள் வரை, மோடி அரசு தொடர்ந்து தமிழ் மரபையும் பண்பாட்டையும் உலக அரங்கில் உயர்த்தி வருவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
“ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள் மீண்டும் தமிழ்மண்ணை வந்தடைந்திருப்பது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை தரும் வரலாற்று தருணம். வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்!” என்று அவரது பதிவில் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
glory Chola era has been restored Anaimangalam copper plates returning home H Raja praises Modi