காணாமல் போன திமுக முன்னாள் எம்எல்ஏ-வின் மகன் சடலமாக மீட்பு.. அதிர்ச்சியில் திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம் கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் திமுக முன்னாள் எம்எல்ஏ பஞ்சவர்ணம். இவர் மகன் வெற்றிசெல்வன்.

வெற்றிசெல்வன் கடந்த 21ஆம் தேதி முதல் காணவில்லை என கூறப்படுகிறது. கோட்டுச்சேரியில் இருந்து காரில் வெளியே சென்ற வெற்றிச்செல்வன் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும், அவர் கிடைக்காத காரணத்தால், வெற்றி செல்வனின் மனைவி ராஜலட்சுமி கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்நிலையில், கும்பகோணம் ரயில் நிலையத்தில் கார் ஒன்று நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்ததாகவும், காரின் அருகில் ஒருவர் மயங்கி நிலையில் இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், காரின் அருகில் ஒரு ஒருவர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து காரில் இருந்த செல்போனை எடுத்து காவல் துறை ஆய்வு செய்ததில், உயிரிழந்தவர் கோட்டுச்சேரி முன்னாள் எம்எல்ஏ பஞ்சவர்ணத்தின் மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் வெற்றிச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரது மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk former mla son death


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->