உதயநிதி வருகைக்காக சேப்பாக்கம் தொகுதியில் திரைச்சீலை அமைத்து குடிசை மறைத்த கூத்து!!
DMK Depty CM Udhayanidhi Stalin
**சேப்பாக்கத்தில் கழிவு நீர் உந்து நிலையம் திறப்பு – திரைச்சீலை சர்ச்சையை ஏற்படுத்தியது**
சென்னை சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் புதிய கழிவு நீர் உந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் சார்பில், சி.ஐ.டி குடியிருப்பு முதல் தெருவில் ரூ.3.01 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த உந்து நிலையம், 6.25 எம்.எல்.டி செயல்திறனுடன் செயல்படுகிறது. இதன் மூலம் 113 தெருக்களில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் பொதுமக்களுக்கு நன்மை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலையத்தில் வாயு கட்டுப்பாட்டு அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது.
திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட துணை முதல்வரின் வருகையையொட்டி, சேப்பாக்கம் தொகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதனை ஒட்டியுள்ள குடிசைப்பகுதியின் இருபுறத்திலும் திரைச்சீல்கள் அமைக்கப்பட்டிருந்தது.
தெருக்களில் வசிக்கும் எளிய மக்களை மறைக்கும் வகையில் திரைச்சீல்கள் பயன்படுத்தப்பட்டதா? என்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்நிலையில், அதிகாரபூர்வ விளக்கம் வரும் வரையில் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் விமர்சிக்கின்றனர்.
English Summary
DMK Depty CM Udhayanidhi Stalin