காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சாதுரியமாக பேசிக் காப்பாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளர்
young woman who attempted suicide after failing in love was saved by a female police assistant inspector who spoke tactfully
சென்னை மாநகரில் மாம்பலத்தில் காதல் தோல்வியால் 4-வது மாடியிலிருந்து குதிக்க ஒரு பெண் முயன்றுள்ளார்.அப்பெண்ணை சாதுர்யமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு தற்போது இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதில் 27 வயது இளம்பெண் ஒருவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்காக கைகளை அறுத்துக் கொண்டு 4-வது மாடியிலிருந்து குதிக்க முயன்றுள்ளார்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கீழ்த்தளத்திலிருந்து அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், அந்த இளம்பெண்ணை கைபேசியில் தொடர்பு கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மீரா, மனமுடைந்த அப்பெண்ணுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொண்டே வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அதன் பிறகு, ஜன்னல் வழியாக கீழே குதிப்பதற்காக அமர்ந்திருந்த அந்த பெண்ணை மீரா காப்பாற்றினார். இதையடுத்து அந்த பெண் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.மேலும், தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை சாதுர்யமாக பேசி காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளர் மீராவுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
English Summary
young woman who attempted suicide after failing in love was saved by a female police assistant inspector who spoke tactfully