ரயில் மூலம் காட்பாடி செல்லும் முதல்வர் ஸ்டாலின்: வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்..!
Chief Minister Stalin to travel to Katpadi by train Will participate in various programs in Vellore and Tirupattur districts
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக 02 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயில் மூலம் காட்பாடி செல்லவுள்ளார்.
இதற்காக அவர் வருகிற 25-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் காட்பாடி செல்லவுள்ளதாக, ரயில் நிலையத்தில் அவருக்கு திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கு வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். பின்னர் வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு, மாலை சுமார் 05 மணிக்கு அணைக்கட்டில் கலைஞரின் திருஉருவ சிலையை அவர் திறந்து வைக்கவுள்ளார்.

அத்துடன், அங்கு கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலய கட்டிடத்தையும் அவர் திறந்து வைக்கவுள்ளதோடு, பிறகு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு செல்லவுள்ளார். அங்கு திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்து, அன்று இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் தங்கவுள்ளார்.
தொடர்ந்து, 26-ஆம் தேதி காலை 09 மணிக்கு ஜோலார்பேட்டை அருகே உள்ளே பொன்னேரியில் பிரமாண்ட அரசு விழா நடைபெறவுள்ளது. இதில் மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார்.

அதன் பின்னர் விழாவில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளதோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக வருகிற 25, 26 ஆகிய 02 நாட்கள் வேலூர், திருப்பத்துார் மாவட்டத்தில் டிரோன்கள், விளம்பர பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு தடையை மீறி டிரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Chief Minister Stalin to travel to Katpadi by train Will participate in various programs in Vellore and Tirupattur districts