விண்வெளிக்கு பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆந்திரா பெண் பொறியாளர் தங்கெடி ஜானவி..!
Andhra Pradesh woman engineer Thangedi Janavi selected for space travel
ஆந்திராவை சேர்ந்த 23 வயதான தங்கெடி ஜானவி என்பவர் 23, 2029-ஆம் ஆண்டு விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. நாசா விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஜானவிக்கு, ஆந்திரா மாநில அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பலக்கொள்ளு கிராமத்தை சேர்ந்தவர் தங்கெடி ஜானவி. இவரது பெற்றோர் குவைத்தில் வசிக்கின்றனர். பஞ்சாப் லவ்லி பல்கலையில், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பிரிவில் பட்டம் பெற்ற இவர், நாசாவின் சர்வதேச விண்வெளி பயணத் திட்டத்தில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இதன் மூலம் டைட்டன் ஆர்பிட்டல் போர்ட் ஸ்பேஸ் ஸ்டேஷன் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், வரும் 2029-ஆம் ஆண்டு விண்வெளிக்கு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கெடி ஜானவி படிக்கும் போதே நாசாவின் விண்வெளி செயலி சவால் மற்றும் இஸ்ரோ உலக விண்வெளி வார இளம் சாதனையாளர் விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Andhra Pradesh woman engineer Thangedi Janavi selected for space travel