ஆரம்பமே அதிருது! வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன்...! - Seithipunal
Seithipunal


வருகிற 19-ந்தேதி, தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வரும் திங்கட்கிழமை வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், 3 இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்கள், மீதமுள்ள ஒரு இடம் ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் தி.மு.க. வேட்பாளர்களாக,எஸ்.ஆர்.சிவலிங்கம், பி.வில்சன், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.மேலும், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, இன்று தி.மு.க. வேட்பாளர்கள் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மேலும், சட்டமன்ற பேரவை செயலக கூடுதல் செயலாளரிடம் வேட்புமனுக்களை அவர்கள் தாக்கல் செய்தனர்.இது தற்போது திமுக தொண்டர்களால் வரவேற்கும் விதமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK candidates and Kamal Haasan who filed their nominations


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->