அன்று கொடுத்தீங்க, மீண்டும் கொடுங்கள்! வாய்ப்பு கேட்கும் விஜயகாந்த்!   - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். கடந்த 2011 ஆண்டு தேர்தலில் தேமுதிகவிற்கு வெற்றியை தந்த ஈரோடு மக்கள் மீண்டும் வெற்றியை தாருங்கள் என கேட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில், ஆடு, மாடுகளை அடைத்து வைப்பதுபோல், மக்களை கூடாரங்களில் அடைத்து வைத்தும்,கறி விருந்து அளித்தும், பணப்பட்டுவாடா செய்தும்,பரிசு பொருட்கள் வழங்கியும், இதுவரை தமிழகம் காணாத வகையில் இந்த தேர்தலில்,புதிய ஃபார்முலாவை ஆண்ட கட்சியினரும் ஆளும் கட்சியினரும் அரங்கேற்றியதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுகுறித்து தேமுதிக சார்பில்  தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் அம்பலப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்,  எவ்வித விதிமீறலும் நடைபெறவில்லை என கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

கடந்த 2011 ஆண்டு தேர்தலில் தேமுதிகவிற்கு வெற்றியை தந்த ஈரோடு மக்கள், மீண்டும் இந்த தேர்தலில் உண்மையாக உழைத்துள்ள கட்சிக்கு,வெற்றியை தந்து, ஒற்றை விரல் புரட்சி மூலம்  சரித்திர சாதனையை தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்" என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK leader Vijayakanth statement about erode by election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->