நாங்க மட்டும் சும்மா இருப்போமா? அறிவிப்பை வெளியிட்ட தேமுதிக!
DMDK announce protest against TN Govt
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து, தேமுதிக சார்பில் ஜூலை 27ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட அறிக்கையில், "மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கிணங்க தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வருகின்ற 27ஆம் தேதி காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மதுரையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மற்ற மாவட்டங்களில் உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த மாவட்டமாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றிபெற செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
DMDK announce protest against TN Govt