சதி! பாகிஸ்தான் ஆப்ரேஷன் சிந்தூர் பெயரை கேட்கும் போதெல்லாம் அவமானகரமான தோல்வி நினைவு வரும்...! - பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கத்ரா- ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைப்பதற்காகவும், செனாப் பாலத்தை திறந்து வைப்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலம் சென்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி:

இதில் கத்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாவது,"பாகிஸ்தான் மனித நேயம், சுற்றுலா, காஷ்மீரிகளின் "rozi-roti"-க்கு எதிரானது, அதனால்தான் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியது.பஹல்காம் தாக்குதல் இந்தியாவில் கலவரத்தை தூண்டுவதை நோக்கமாக கொண்டது.

காஷ்மீர் மக்களின் வருமானத்தை நிறுத்துவதற்கான பாகிஸ்தான் சதிதான் பஹல்காம் தாக்குதல்.இந்தியா பயங்கரவாதத்திடம் அடிபணியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

பாகிஸ்தான் 'ஆப்ரேஷன் சிந்தூர்' பெயரை கேட்கும்போதெல்லாம், அவமானகரமான தோல்வி நினைவு கூறும்.பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் அதிக அளவில் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும்.

சிறிய அளவில் சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Conspiracy Whenever pakisthan hear name of Operation Sindoor it remember humiliating defeat Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->