தமிழகத்தில் பாஜக வெற்றிபெற்றது ஒரு துரதிருஷ்டம் - ப. சிதம்பரம் குமுறல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பாஜக காலடி எடுத்து வைக்க முயன்றதும், அதில் ஓரளவு வெற்றி பெற்றதுமே மிகப்பெரிய துரதிருஷ்டம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப. சிதம்பரம், “தமிழகத்தில் பாஜக தங்களுக்கான இடம் உருவாக்க ஏகபடியாக முயற்சி செய்து வருகிறது. அதற்காக பல்வேறு கூட்டணிகள் மற்றும் உள்ளூராட்சி நெருக்கங்களையும் பயன்படுத்தி ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கே ஒரு வருத்தகரமான தருணம்.

அதிமுக, பாஜகவைச் சேர்ந்த கட்சியாக ஆகிவிட்டது என்றும், எதிர்வரும் தேர்தலில் இரண்டும் இணைந்து களத்தில் நிற்கும் திட்டத்தில் இருப்பதாக" குறிப்பிட்டார்.

மேலும், “பாஜக என்றால் வட்டார மக்களுக்கு திணிப்பு, மதவெறி, வட இந்திய கண்ணோட்டம் எனத் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. இந்த மனநிலையை மக்கள் மாற்றவில்லை.

ஒருபுறம் அமித்ஷா ‘கூட்டணி ஆட்சி வரும்’ என்கிறார். மறுபுறம் எடப்பாடி ‘தனித்துத் தான் ஆட்சி அமைப்போம்’ என்கிறார். இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி – அதிமுக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பதுதான்” என்றார் சிதம்பரம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress P Chidambaram BJP Tamilnadu


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->