பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் – திரையுலகம் இரங்கல்!
Famous actor Kota Srinivasa Rao has passed away The film industry mourns
பிரபல தெலுங்கு நடிகர், பாடகர், மற்றும் டப்பிங் கலைஞரான கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவர் கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 12) உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகில் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த கோட்டா சீனிவாச ராவ், தெலுங்குத் திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் தனித்துவ முத்திரை பதித்தவர். 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், நடிப்பு மட்டுமின்றி பாடலும், டப்பிங் கலைக்கும் ஈடுபட்டிருந்தார்.
தமிழில் முதல் முறையாக 2003 ஆம் ஆண்டு 'சாமி' படத்தில் “பெருமாள் பிச்சை” என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.அந்த படம் சூப்பர்ஹிட் ஆக, அவரது வில்லத்தனமும், வேடத்தில் இருந்த நுணுக்கமும் பாராட்டப்பட்டது.
பின்னர், 'குத்து', 'ஜோர்', 'ஏய்', 'திருப்பாச்சி', 'பரமசிவன்', 'சத்யம்', 'கோ', 'சாமி 2', 'காத்தாடி' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.அவரது நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியான படம் – 'சுவர்ண சுந்தரி'. இந்த படத்திலும் அவர் பாராட்டத்தக்க நடிப்பைக் காட்டினார்.
English Summary
Famous actor Kota Srinivasa Rao has passed away The film industry mourns