"அச்சம் இல்லை!": செல்வப்பெருந்தகைக்கு சவால் விடும் மாணிக்கம் தாகூர் - காங்கிரசில் முற்றும் மோதல்!
congress mp vs selvaperunthagai dmk alliance
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல், இப்போது பாரதியாரின் கவிதைகள் மூலம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. மதுரையில் மாணிக்கம் தாகூர் ஆற்றிய அதிரடி உரையைத் தொடர்ந்து, கட்சிக்குள் இருந்த புகைச்சல் இப்போது பகிரங்கமாகத் தெரிகிறது.
நேரடித் தாக்குதல்: "எங்கள் பலம் இல்லாமல் திமுக அரியணை ஏறியிருக்க முடியாது; மரியாதை இல்லையெனில் திருப்பி அடிப்போம்" என மாணிக்கம் தாகூர் பேசியது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தலைமையிடம் புகார்: இந்த விவகாரம் குறித்து மேலிடத்திற்கு அறிக்கை வழங்கியதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்திருந்தார்.
தனக்கு எதிராகப் புகார்கள் மற்றும் விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், மாணிக்கம் தாகூர் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பாரதியாரின் புகழ்பெற்ற
"அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்ப தில்லையே" வரிகளைப் பதிவிட்டுள்ளார்:
செல்வப்பெருந்தகை புகார் அளித்த பின்பும், தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதைத் தாகூர் இந்தத் துணிச்சலான பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இரு தலைவர்களுக்கு இடையே ஒரு 'நிழல் யுத்தம்' நடப்பதையே காட்டுகிறது.
English Summary
congress mp vs selvaperunthagai dmk alliance