நேரு – படேல் குறித்த ராஜ்நாத் சிங்கின் கருத்தும், காங்கிரஸின் மறுப்பும்! - Seithipunal
Seithipunal


மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஜவஹர்லால் நேரு குறித்து ஒரு முக்கியக் கருத்தை முன்வைத்தார். நேரு, பாபர் மசூதியைக் கட்ட அரசு நிதியைப் பயன்படுத்த விரும்பியதாகவும், ஆனால் அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் அதனை உறுதியாக எதிர்த்து தடுத்து நிறுத்தியதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக, அப்போதைய பாஜக தலைவர்களின் பதிவுகளையும், சர்தார் படேலின் மகள் மற்றும் தனிச் செயலாளராக இருந்த மணிபென் படேலின் நாட்குறிப்பில் உள்ள தகவல்களையும் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார். நாட்குறிப்பின்படி, செப்டம்பர் 20, 1950 அன்று நேரு மசூதி குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அதற்குப் படேல், "மசூதி கட்ட அரசு பணம் கொடுக்க முடியாது" என்று பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், ராஜ்நாத் சிங்கின் இந்தக் கூற்றை காங்கிரஸ் கட்சி கடுமையாக மறுத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், இது வரலாற்றைத் திரிக்கும் முயற்சி என்று சாடினார். அவர், ராஜ்நாத் சிங் பரப்பும் கருத்துகளுக்கும் அசல் நாட்குறிப்புப் பதிவுகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஜெய்ராம் ரமேஷ் மேலும் கூறுகையில், நேரு எப்போதும் கோவில், மசூதி, தேவாலயம் என எந்த மத நிறுவனத்திற்கும் அரசுப் பணம் செலவழிக்கப்படுவதை எதிர்த்தார். மாறாக, ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களுக்காகவே அரசு நிதியைப் பயன்படுத்த அவர் விரும்பினார் என்று தெளிவுபடுத்தினார்.

இதன் ஒரு பகுதியாக, இன்று பாராளுமன்ற கூட்டத்திற்கு வந்த ராஜ்நாத் சிங்கிடம், மணிபென் படேலின் நாட்குறிப்பின் அசல் குஜராத்தி பக்கங்களை ஜெய்ராம் ரமேஷ் நேரில் வழங்கியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congress Jairam Ramesh BJP Rajnath Singh Sardar Patel nehru issue


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->