கண்டனம்! வேறு மாதிரி -னா என்ன மாதிரி? மடப்புரம் அஜித் குமார் மாதிரியா...? - வினவிய எடப்பாடி பழனிச்சாமி
Condemnation Different model what model Is Madapuram Ajith Kumar model Edappadi Palaniswami questioned
எதிர்க்கட்சி தலைவரும் ,அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான 'எடப்பாடி பழனிசாமி' அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி:
அதில் அவர் குறிப்பிட்டதாவது,"விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து "ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் மு.க.ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றனவா?
வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்! மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம் "என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Condemnation Different model what model Is Madapuram Ajith Kumar model Edappadi Palaniswami questioned